21 மீனவர்களை விடுவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

01.02.2022 14:42:27

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்கள் ,2 விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் இருப்பது அவர்களது குடும்பத்தினரை துயரில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.