நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம்

16.05.2023 16:06:01

நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக  குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  குறித்த நியமனம்  வழங்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி  ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது,

எதிர்வரும்  23 ஆம்  திகதி  முதல்  அமுலாகும்  வகையில்  குறித்த  நியமனம்  வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்றத்தின்  தற்போதைய  பணிக்குழாம்  பிரதானியாகவும்  பிரதிசெயலாளர்  நாயமாகவும்  அவர்  பதவி வகித்து  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.