இலங்கையர்களுக்கு அழைப்பு!

03.02.2026 15:31:52

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு புது டெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விழா நாளை (2026.02.04) காலை 9:00 மணிக்கு இலக்கம் 27, கெளடில்யா மார்க், சாணக்யாபுரி, புது டெல்லியில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்வு இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மகிஷினி கொலோன்னேவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அழைப்பின்படி, பங்கேற்பாளர்கள் தேசிய உடை, சீருடை அல்லது நேர்த்தியான உடையில் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நுழைவுக்கு முன் பதிவு கட்டாயம் என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

கலந்துகொள்ள விரும்பும் இலங்கையர்கள் rsvp.srilanka.newdelhi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் 2026 ஜனவரி 30 ஆம் திகதிக்குள் பதிவு செய்யுமாறும் முன்னதாக கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

 

1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றதைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கையின் சுதந்திர தினம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இலங்கையர்களால் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க தேசிய நிகழ்வாகும்.