
’சவாலை ஏற்கத் தயார்’
04.01.2025 09:40:07
ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
செயற்குழு தன்னை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமித்தால் சவாலை ஏற்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளதாக, நேற்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.