நுணுக்கமான அறிவு அபாரம் - ரித்விகா

24.07.2021 10:37:50

தென்னிந்திய நடிகையும், பிக்பாஸ் வெற்றியாளருமான ரித்விகா, தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், அறிமுக இயக்குனர் அரவிந்த் சாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள "ரௌத்திரம்" கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. 

இப்படம் பற்றி ரித்விகா கூறும்போது, ‘அரவிந்த் சாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகப்பெருமையான தருணம். ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக அவரை அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது’ என்றார்.

நவராசா ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 190 நாடுகளில் வெளியாகிறது.