இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கையளிப்பு!

07.02.2024 15:19:39

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அதனை திறந்து வைத்துள்ளனர்.

சுமார் 3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எட்டயபுரம் – குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இநட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேலும் சிவகாசி – ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.