
உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். |
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடும் தரப்பினருடன் கூட்டணி அமைக்க போவதில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது எம்மை விட்டுச் சென்றவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயுள்ளார்கள். அடுத்த தேர்தலில் எந்த தரப்பில் இருந்து போட்டியிடுவது என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். கட்சிக்குள் இளையோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாம் கிராம மட்டத்திலிருந்து மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். பொதுஜபெரமுன மீண்டும் எழுச்சி அடையும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்jலை கையாள்வது தொடர்பில் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம். அரசாங்கம் புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என்றார். |