நீருக்கு அடியில் இந்தியாவின் முதல் ரயில் சேவை!

06.03.2024 14:00:00

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் செல்லும்  மெட்ரோ ரெயில்  சேவையை பிரதமர்  நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் 32 மீற்றர் ஆழத்தில்  குறித்த மெட்ரோ ரெயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.