பதவியை இராஜிநாமா செய்தார் பல்கேரியா ஜனாதிபதி.

21.01.2026 13:00:00

பல்கேரியாவில் ஜனநாயக ஆட்சி நிலவ தொடங்கியதில் இருந்து அங்கு பதவி வகிக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முதல் முறையாக
உடனே முடிவுக்கு வந்துவிட்டது.

இதன்படி பல்கேரியாவின் ஜனாதிபதி ராதேவ் தன் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இவரது இராஜிநாமா கடிதம் அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது என்றும், அவருக்குப் பதிலாக துணை ஜனாதிபதி இலியானா யோடோவா தற்காலிகமாக பொறுப்பேற்பாா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் பல்கேரியா, கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமாா் எட்டு முறை பாராளுமன்றத் தோ்தல்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.