
உக்ரைனுக்கு துணை நிற்கும் கனடா!
G7 மாநாட்டின் போது, கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கனடா, உக்ரைனுக்கு 4.3 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள உதவியை உறுதியளித்துள்ளது. இதில் 2 பில்லியன் கனேடிய டொலர், ஆயுதங்கள், ட்ரோன்கள், குண்டுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், நான்காவது தலைமுறை ராணுவ தேவைகளுக்காக நேட்டோ பாதுகாப்பு செலவில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. |
மேலும் 2.3 பில்லியன் கனேடிய டொலர் நிதி, யுத்தத்தில் சேதமான உக்ரைனின் உட்கட்டமைப்பை புதுப்பிக்க கடனாக வழங்கப்படும். இதற்கான வட்டிப்பணம், ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துகளிலிருந்து பெறப்படும். இந்த சந்திப்பில், ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்ததும், 130 பேர் காயமடைந்ததும் பேசப்பட்டன. “நாங்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் அதற்கும் முன் ரஷ்யாவிற்கு அழுத்தம் தேவை,” என ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். கனடா, ரஷ்யாவின் “shadow fleet” என அழைக்கப்படும் எண்ணெய்க் கப்பல்களுக்கு மற்றும் 77 தனிநபர்கள், 39 நிறுவனங்களுக்கு புதிய தடை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மொத்தம் 201 கப்பல்கள் பன்னாட்டு தடைகளை மீறி எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ஆயுதங்களை கடத்துவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. நேட்டோவின் 2% GDP பாதுகாப்பு செலவீடு இலக்கை எட்ட கனடா திட்டமிட்டுள்ளதாக கார்னி கூறினார். இது, எதிர்வரும் ஹேக் மாநாட்டில் முக்கிய அம்சமாக இருக்கும். |