கொரோனா, ஒமிக்ரானை அடுத்து புளோரோனா – மூன்று பேர் பாதிப்பு

12.01.2022 03:50:59

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் உருவாகி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸூடன் ‘இன்புளுயன்சா’ எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து, ‘புளோரோனா’ (Florona – Flu + Coronavirus) என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் முதன்முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவின் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் 28 வயது இளம்பெண் உட்பட 3 பேருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.