கல்வியமைச்சிலிருந்து அடுத்தடுத்த நினைவூட்டல்கள்

13.03.2024 07:50:49

தற்போதைய உயர் வெப்பநிலையின் பொருட்டு பாடசாலைகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகளை நினைவுகூர்ந்து அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அம்பாறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய போது திடீரென உயிரிழந்தமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் வாசன பெரேராவினால் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அமைச்சினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை சில பாடசாலைகள் புறக்கணித்துள்ளதாக செயலாளர் தனது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பநிலையின் அடிப்படையில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது குறித்த அறிவுறுத்தல்கள் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளன.