
‘வோல்கர் டர்க்‘இன்று கண்டிக்கு விஜயம்!
26.06.2025 08:52:11
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்,(Volker_Turk )இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வோல்கர் டர்க் செம்மணி மனித புதைகுழி பகுதியை பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது யாழ் விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தது.
குறித்த பதிவில் இலங்கையின் பல பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.