5000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

03.07.2023 13:00:00

2019, 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் உயர்தரத்தில் கல்வி கற்ற 5,000 மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் நாளை (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உரிய கடன் தொகை பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்பு சார்ந்த கற்கை நெறிகளை கற்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.