நம்பிக்கை வெளியிட்ட புடின்!

25.07.2022 10:44:56

சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கு ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி (Yury Materiy) இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ​​ரணில் விக்கிரமசிங்க அதிபர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வாழ்த்து கடிதத்தை ரஷ்ய தூதுவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

 

நம்பிக்கை வெளியிட்ட புடின்

அதிபர் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ரஷ்ய அதிபர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் "மக்களின் நலன்களுக்காகவும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நலனுக்காகவும் பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அரச தலைவர் என்ற முறையில் உங்களது செயல்பாடுகளை நான் எதிர்பார்க்கிறேன்" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.