100 பேர் இராணுவ தளபாடங்களுடன் அமெரிக்க படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்

30.04.2021 09:42:45

அமெரிக்க படை வீரர்கள் 100 பேர், இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர்.

கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்க படை வீரர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க படையினரை திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

இதற்கமையவே முதற்கட்டமாக  படை வீரர்கள் 100 பேர் விமானம்  ஊடாக அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.