ஜேர்மனியில் 4.3 கோடி டன் லித்தியம் கண்டுபிடிப்பு!
|
ஜேர்மனியில் 4.3 கோடி டன் லித்தியம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் (Altmark Basin) பகுதியில், பழைய எண்ணெய் வயலில், உலகின் மிகப்பெரிய லித்தியம் கையிருப்புகளில் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. |
|
Neptune Energy நிறுவனம் நடத்திய ஆய்வில், 43 மில்லியன் டன் லித்தியம் கார்பனேட் (LCE) இருப்பதாக Sproule ERCE என்ற சுயாதீன மதிப்பீட்டாளர் உறுதி செய்துள்ளார். இது உலகின் மிகப்பெரிய ஒற்றை இட லித்தியம் வளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நிறுவனம் தற்போது ஒரு உற்பத்தி உரிமம் (Jeetze-L) மற்றும் மூன்று ஆய்வு உரிமங்களை (Milde A-L, B-L, C-L) பெற்றுள்ளது. Direct Lithium Extraction (DLE) தொழில்நுட்பம் மூலம், ஆழமான உப்பு நீரிலிருந்து லித்தியம் பிரித்து, மீதமுள்ள திரவத்தை மீண்டும் நிலத்திற்குள் செலுத்தும் முறையை பயன்படுத்துகின்றனர். ஆகஸ்ட் 2025-இல் நடந்த பைலட் திட்டத்தில், பேட்டரி தர லித்தியம் கார்பனேட் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. செப்டம்பர் 2025-இல் தொடங்கிய மற்றொரு பைலட் திட்டத்தில், உறிஞ்சுதலை (adsorption process) அடிப்படையாகக் கொண்ட மாறுபட்ட செயல்முறையில் சோதனை செய்யப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு, ஐரோப்பாவின் மின்சார வாகன பேட்டரி உற்பத்தி மற்றும் சுத்தமான எரிசக்தி மாற்றம் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திய சந்தையில், ஜேர்மனி புதிய சக்தியாக உருவெடுக்கவுள்ளது. |