டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்குகின்றது !
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்குகின்றது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை இரண்டு இலட்சத்து 99ஆயிரத்து 223பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 65ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில் இதுவரை இரண்டாயிரத்து 539பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 609பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு பதிவாகவில்லை.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறாயிரத்து 312பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒன்பது பேரின் கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக இரண்டு இலட்சத்து 90ஆயிரத்து 372பேர் குணமடைந்துள்ளனர்.