IPL இல் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் நாடு திரும்பினர்!

02.05.2024 14:52:50

இந்திய பிரிமீயர் லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

 

அமெரிக்காவில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா விஸா அனுமதிக்கான நேர்முக பரீட்சைக்கு தோற்றும் வகையிலேயே இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷார ஆகியோர் அமெரிக்காவிற்கான விஸாவை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

இவ்வாறு நாடு திரும்பிய இலங்கை வீரர்கள், அமெரிக்க விஸாவிற்கான நேர்முக பரீட்சையை இன்று எதிர்நோக்கியுள்ளனர்.

IPL போட்டிகளில் பங்கேற்பதற்காக குறித்த இலங்கை வீரர்கள் மீண்டும் இந்தியா செல்லும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related