
தமிழர் பாரம்பரியத்தை பாதுகாக்கச் சொல்லுங்கள்!
இப்போது தான் நேரம் – யுனெஸ்கோவிடம் தமிழர் பாரம்பரியத்தை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கச் சொல்லுங்கள். அன்பான தமிழ் நண்பர்களுக்கும் சமூக உறவுகளுக்கும், இது மிகவும் அவசரமாக நீங்கள் எங்களுடன் சேர வேண்டிய தருணம். |
குருந்தூர்மலை உள்ளிட்ட தமிழ் பாரம்பரிய இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் வெறும் தொல்லியல் மீதான தாக்குதலாக இல்லாது — அது நம் அடையாளம், நம் வரலாறு மற்றும் நாம் ஒரு மக்களாக வாழும் உரிமைக்கு எதிரான தாக்குதலாகும். தமிழ் விவசாயிகள் கைது செய்யப்படுகின்றனர். சிங்கள பிக்குகள் சட்டவிரோதமாக புனிதமான சைவத் தலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இலங்கை அரசு மற்றும் அதன் தொல்லியல் திணைக்களம் தமிழரின் வரலாற்றை சிங்கள-பௌத்த வரலாறு என மாற்றி எழுதுகிறது. இது ஒரு கலைமுறை இன அழிப்பு. நாம் அமைதியாக இருக்க முடியாது. இது எதிர்த்துப் பேச வேண்டிய நம்முடைய தருணம். உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தமிழரும் யுனெஸ்கோவுக்கு எழுதி, கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும்: ▪ தமிழ் தொல்லியல் தளங்களை சிங்களப்படுத்துவதை நிறுத்தச் சொல்லுங்கள், ▪ தமிழர் பாரம்பரியத்தை நமது பூர்வீக நிலங்களில் பாதுகாக்கச் சொல்லுங்கள், தமிழ் நிலங்களில் காணப்படும் தொல்லியல் சான்றுகள் தமிழருக்கே உரியது என்பதை உலகத்திற்கு உணர்த்துங்கள் — சிங்கள பிக்குகளுக்கும் இலங்கை அரசுக்கும் அல்ல. ▪ தமிழ் நிலங்களில் காணப்படும் தொல்லியல் சான்றுகள் தமிழருக்கே உரியது என்பதை உலகத்திற்கு உணர்த்துங்கள் — சிங்கள பிக்குகளுக்கும் இலங்கை அரசுக்கும் அல்ல. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்: படி 1: இந்தக் கடிதத்தை நகலெடுத்து ஒட்டுங்கள் : கீழே நாம் எழுதிய கடிதம் உள்ளது: படி 2: கீழ்க்கண்ட யுனெஸ்கோ மின்னஞ்சல்களுக்கு அனுப்புங்கள்: wh-info@unesco.org, culturesector@unesco.org விருப்பத்திற்கேற்ப: உங்கள் நாடு/மாநில எம்.பிக்கள், ஊடகவியலாளர்கள் அல்லது மனித உரிமை அமைப்புகளுக்கும் பிரதிகளை அனுப்பலாம். ஏன் இது முக்கியம்: நாம் இன்று பேசவில்லை என்றால், நம் கோயில்கள், கல்வெட்டுகள், வரலாறு அனைத்தும் திருடப்பட்டு மறுசெய்யப்படும். நாம் அமைதியாக இருந்தால், வேறு ஒருவர் நம் வரலாற்றை எழுதுவார்கள் — அதில் நம்மை மறந்து விடுவார்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தமிழ் குரல்கள் இந்த சட்டவிரோதங்களை எதிர்த்துத் தரக்கோரும் தருணம் இது. இது வெறும் ஒரு இடம் பற்றியது அல்ல — இது நம் மக்களாக நாம் யார் என்பதைப் பற்றியது. மற்றொரு பேரழிவுக்காக காத்திருக்க வேண்டாம். நம் வரலாற்றை மறைந்த விடக்கூடாது. இப்போது செயல்படுங்கள். உரக்கப் பேசுங்கள். இன்று யுனெஸ்கோவுக்கு எழுதுங்கள். ஒற்றுமையிலும் போராட்டத்திலும், நன்றி, தமிழ் டயஸ்போரா செய்திகள் |