மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் இலங்கை ரயில் நிலைய அதிபர்கள்!

27.01.2022 08:21:06

புகையிரத திணைக்களம் கனிஷ்ட ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யபடாமை காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராக உள்ளதாக  இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்க தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளை எழுத்து மூலம் ரயில்வே அதிகாரிகளிடம் மீண்டும் சமர்பிப்பதாகவும், தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.