நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு

27.10.2021 08:32:35

நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஊழியர்கள் இதுபற்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் நடந்த விமல் அணி தலைமையிலான பேச்சுவார்த்தையில் கூறியுள்ளனர் என்று அறியமுடிகிறது.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிகாவுக்கு விற்பனை செய்தமை குறித்த அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.