கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் 5000 வரை அபராதம்
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பில் கீழ்க்கண்ட 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பக்கிங்ஹாம் கால்வாய் சாலை, சாத்தாங்காடு, திருவொற்றியூர், மணலி காமராஜ் சாலை, டிரக் முனையம், இரவுக் காப்பகம் அருகில், (மாதவரம் பேருந்து முனையம் பின்புறம்), வடக்கு அவென்யூ சாலை, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, கால்நடை டிப்போ, அவதானப் பாப்பையா சாலை, சூளை, (மாநகராட்சி பள்ளி எதிரில்), ஜமாலியா (பழைய லாரி நிலையம்), பெரம்பூர் நெடுஞ்சாலை, மாணிக்கம் பிள்ளை தெரு, அம்பத்தூர், முதல் பிரதான சாலை, செனாய் நகர், (கஜலட்சுமி காலனி அருகில்) லாயட்ஸ் காலனி (மாநகராட்சி ஐடிஐ நிறுவனம் அருகில்) குருசிவா தெரு, எஸ். எம்.
பிளாக், ஜாபர்கான்பேட்டை, கோடம்பாக்கம், (10 எம். ஜி. ஆர். நகர் காவல் நிலையம் அருகில்)நடராஜன் சாலை மற்றும் பாரதி சாலை சந்திப்பு (இராமாபுரம் ஏரி அருகில்) கிருஷ்ணா நகர் பிரதான சாலை, ஒத்தவடை மயானபூமி அருகில் வேளச்சேரி மயானபூமி, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் 200 அடி ரேடியல் சாலை, பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகம் கங்கையம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அருகில்)எனவே பொதுமக்கள் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும்.
இதை மீறும் நபர்களின் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019ன் படி பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவாக கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ. 2000மும், 1 டன் அளவிற்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ. 5000மும் அபராதம் விதிக்கப்படும். சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.