புதிய வர்த்தக வியூகத்தை வெளியிட்ட பிரித்தானியா!.

27.06.2025 07:47:34

பிரித்தானிய வர்த்தகத்தை பாதுகாக்கவும் அதிகரிக்கவும் புதிய வர்த்தக வியூகம் வெளியிடப்பட்டது. பிரித்தானிய அரசு, உலகத்தில் மிகவும் இணைக்கப்பட்ட நாடாக மாறுவதையும், நாட்டின் முக்கிய தொழில்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் புதிய வர்த்தக வியூகத்தை (Trade Strategy) வியாழனன்று வெளியிட்டது.

இவ்வியூகம், பிரித்தானிய தொழில்கள் 5 பில்லியன் பவுண்டு வர்த்தக வாய்ப்புகளை திறக்க உதவுகிறது.

UK Export Finance (UKEF) நிறுவனத்தின் கடன் வழங்கும் திறன் 80 பில்லியன் பவுண்டாக அதிகரிக்கப்படுகிறது.

சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விற்பனை காப்பீடு, உள்நாட்டு ரத்துசெய்த நுகர்வோர் ஒப்பந்தங்களை எளிதாக்குதல் போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய உத்தி, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமீபத்தில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்தி புத்தகங்கள்

இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தம், பிரித்தானிய பொருளாதாரத்தில் 4.8 பில்லியனை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவைத் துறை, சுத்த ஆற்றல், ஸ்டீல் தொழில்கள், வாகன உற்பத்தி உள்ளிட்ட உயர் வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய தொழில்கள் விரைவாக மற்ற நாடுகளில் விரிவடைய இந்த உத்தி வழிவகுக்கும்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “வணிகம் வெற்றிபெறுவதை உறுதி செய்வதே பிரித்தானியாவிற்கு வளர்ச்சி கொண்டு வரும். இது பணம், வேலைவாய்ப்பு, தரமான வாழ்க்கை என அனைத்திலும் முன்னேற்றம் தரும்.” என கூறியுள்ளார்.