கொழும்பில் பதற்றம்

20.03.2024 14:33:10

கொழும்பு புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் , தண்ணீர் பாய்ச்சல் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடாத்தியதையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டது. 

'ஜன அறகல வியாபரய' (மக்கள் போராட்ட இயக்கம்) ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உட்பட எண்ணற்ற குறைகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.