இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

23.06.2025 08:03:53

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்குப் பயணிக்க விரும்புவோருக்கு, ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு இயக்கப்படும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

 

இந்த தகவலை இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஆர்வமுள்ள நபர்கள் தூதரகத்திற்குச் சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டெல் அவிவிலிருந்து ஜோர்தானின் அம்மானுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்படும்.

மேலும், அம்மானில் இருந்து புது டெல்லிக்கு விமானப் பயணத்திற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புது டெல்லியில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்திற்கான டிக்கெட்டுகளை பயணிகள் தாங்களாகவே வாங்க வேண்டும்.

 

அறிக்கையின்படி, தொடர்புடைய விமானங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை அந்தந்த தூதரகங்கள் ஒருங்கிணைக்கும்.

பதிவு ஜூன் 23 மற்றும் 24, 2025 ஆகிய திகதிகளில் மட்டுமே திறந்திருக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.