
பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு!
மக்கள்தொகைக்கு ஏற்ப பதுங்குகுழிகளை (bunker) கட்டி பராமரிக்கும் ஒரே நாடாக சுவிட்சர்லாந்து உள்ளது. சுவிட்சர்லாந்து, உலகம் முழுக்க அணு தாக்குதல் அபாயம் அதிகரிக்கும் நிலையில், தனது மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பளிக்கக் கூடிய 3.7 லட்சம் அணு பாதுகாப்பு பதுங்கு குகைகளை (bunkers) வைத்திருக்கும் ஒரே நாடாகும். |
1963-ஆம் ஆண்டில், குளிர்ப்போர் காலத்தின் போது, நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அணுகுண்டு பாதுகாப்பு முகாமொன்று கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. புதிய கட்டிடங்களில் இந்த பதுங்குகுழிகள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டும் அல்லது அருகிலுள்ள பொது முகாமுக்கான நிதி வழங்கப்பட வேண்டும். பனிமலைகளுக்குள், வீடுகளின் அடித்தளங்களில், சிறு பள்ளி மைதானங்களின் கீழ் என பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள இம்முகாம்கள், பசுமையான சுவிட்சர்லாந்தின் அடியில் ஒரு பாதுகாப்பு உலகை உருவாக்குகின்றன. 2022-ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு, இந்த குகைகளின் மீதான மக்கள் ஆர்வம் மீண்டும் உயந்தது. அரசு பல மில்லியன் ஃபிராங்குகளை ஒதுக்கி, இந்த முகாம்களை சீரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. பொதுத்துறையும், தனியார் முகாம்களும் இன்ஸ்பெக்ஷன் செய்யப்படுகின்றன. Réduit பாதுகாப்பு திட்டம், மற்றும் சொந்த வீடுகளுக்குள் கட்டப்படும் அணு பாதுகாப்பு பதுங்குகுழிகள், இரண்டுமே இந்த நாடு தனித்துவமாக மக்கள் பாதுகாப்பை முன்னோக்கிப் பார்க்கும் அணுகுமுறையை காட்டுகின்றன. நேரடி அணு தாக்குதலுக்கு எதிராக முழுமையாக பாதுகாப்பளிக்க முடியாது என்றாலும், பல்வேறு உயிரியல், வேதியியல் அல்லது அணுக்கதிர்வீச்சு தாக்கங்களிலிருந்து பாதுகாக்க இந்த குகைகள், பதுங்கு குழிகள் சிறந்தவையாக உள்ளன. “மரபில் இருக்கும் பாதுகாப்பு உணர்வு”, இதுவே சுவிட்சர்லாந்தின் பலம். எங்கு பார்த்தாலும் bunker-கள் வெறும் concrete அறைகள் அல்ல, அவை ஒரு நாட்டின் விழிப்புணர்வின் அடையாளங்கள். |