
முப்படைகளுக்கு அழைப்பு.
25.09.2025 08:12:37
பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் உள்ள முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
செப்டம்பர் 27, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12 ஆல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் பிறப்பிக்கப்பட்டது.