சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனம்

01.02.2023 21:46:23

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இன்று(1) சுதந்திர தின கரிநாள் பிரகடனம் மற்றும் பேரணி குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் யாழ் வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் ''தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பு நாள். இணைவோம் ஒன்றாக.. எழுவோம் பலமாய்..''என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒன்றும் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

சுவரொட்டி

குறித்த சுவரொட்டியானது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் யாழ் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.