மறுவடிவம் பெறுமா இந்தியா கூட்டணி?

21.02.2026 13:15:00

இந்தியா கூட்டணியின் தலைவராக தமிழக முதல்வர் ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மணிசங்கர் ஐயர் மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவின் தாக்கரே ஆதரவு பத்திரிகையான சாம்னாவிலும் ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்துக்கள் எழுதப்பட்டு வருகிறது. இதனால் தேசிய அரசியல் அரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பங்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. கிங்-மேக்கர் காமராஜர் "இந்தியா" கூட்டணி தனது எதிர்கால தலைமை குறித்து ஆழமாக சிந்தித்து வரும் இந்த சூழலில், ஸ்டாலினை முன்னாள் முதல்வர் காமராஜருடன் ஒப்பிடும் பேச்சு வலுவடைந்துள்ளது.

காமராஜரைப் போலவே, ஸ்டாலின் ஒரு "கிங்-மேக்கராக" உருவெடுப்பாரா, அல்லது பிரதமர் வேட்பாளராக அவரே முன்மொழியப்படுவாரா என்ற கேள்விகள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. 1960களில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்தவர். ஜவஹர்லால் நேரு மறைவுக்கு பின் இந்திய அரசியலில் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியை பிரதமராக்குவதில் காமராஜரின் பங்கு மிகப்பெரியதாகும். ஆனால், பிரதமராகும் ஆசையை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை.

"கிங்-மேக்கர்" என்ற பட்டத்தை நிலைநிறுத்திக் கொண்ட அவரது தலைமைப் பண்பு, தேசிய அரசியலில் மு.க.ஸ்டாலினுடன் ஒப்பிடப்படுகிறது. ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை வலுவாக வழிநடத்தி, அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தியுள்ளார். இந்தியா கூட்டணி அவரது நிர்வாக அனுபவம், செயல்பாடுகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை தேசிய அளவில் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இதன் காரணமாக, "இந்தியா" கூட்டணியின் எதிர்கால தலைமை குறித்து எழும் விவாதங்களில் அவரது பெயர், ஒரு முக்கியக் குரலாக, தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.

"இந்தியா" கூட்டணி என்பது பல்வேறு மாநிலக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாக இருந்து வருகிறது. Powered By இந்தியா கூட்டணி தலைமை யார்? இதில் ஒவ்வொரு மாநிலத் தலைவரும் தங்களது மாநிலத்தில் வலுவான செல்வாக்குடன் இருப்பதால், கூட்டணித் தலைமை குறித்த கேள்வி தொடர்ந்து சிக்கலாகவே உள்ளது. இதனால் பொதுவான தலைமையை முன்மொழிவதில் சவால் ஏற்படுகிறது. இதுதான் காமராஜர் போன்ற ஒரு "கிங்-மேக்கரின்" தேவையை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்திக்கு அசைக்க முடியாத தலைமைப் பொறுப்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறுகிறார்.

பிரதமர் வேட்பாளர் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுலின் அரசியல் செல்வாக்கு வலுப்பெற்றுள்ளதாகவும் கூறுகிறார். ஆனாலும், "இந்தியா" கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்விக்கு இன்னும் நேரடி விடை கிடைக்கவில்லை. கூட்டணிக்கு ஒரு பொதுவான தலைமை முகம் தேவை என்ற விவாதம் நீடிக்கிறது. முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி போன்ற கொள்கைகளுக்கு ஆழமான முன்னுரிமை அளித்து வருகிறார். தேசிய அரசியலில் ஸ்டாலின்? தேசிய அரசியலில் அவரது பங்கு முக்கியத்துவம் பெற்ற போதிலும், பிரதமர் பதவிக்கான எந்தவொரு வெளிப்படையான விருப்பத்தையும் அவர் இதுவரை தெரிவித்ததில்லை.

அவரது முதன்மை நோக்கம், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதும், திராவிட மாடல் ஆட்சியை வெற்றிகரமாக முன்னெடுப்பதுமே என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தியின் தலைமை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், "இந்தியா" கூட்டணியின் அனைத்துக் கட்சிகளுக்கும் அவர் ஒரே மாதிரியான ஏற்புடைமையை பெற்றுள்ளாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. ஒருங்கிணைப்பாளர் கூட்டணி அரசியலில், தனிநபர் தலைமையை விட, அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தும், பொதுவான செயல்திட்டமும் பெரும்பாலும் வெற்றிக்கான அடிப்படையாக அமையும்.

இந்தக் குழப்பமான தேசிய அரசியல் சூழலில், மு.க. ஸ்டாலின் வெறும் கூட்டணியின் ஒரு பகுதியாக மட்டும் இல்லாமல், ஒரு திறமையான வியூகவாதியாகவும், ஒருங்கிணைப்பு சக்தியாகவும் திகழ்கிறார். பல்வேறு மாநிலத் தலைவர்களுடனான நல்லுறவும், கூட்டணிக் கட்சிகளை ஒற்றுமையுடன் ஒருங்கிணைக்கும் அவரது ஈடுபாடும், அவரை தேசிய அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத, மிகுந்த மதிப்பிற்குரிய முகமாக மாற்றியுள்ளது. "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற புதிருக்கு இன்னும் ஒரு தெளிவான விடை கிடைக்கவில்லை. இருப்பினும், மு.க. ஸ்டாலின், காமராஜரைப் போலவே ஒரு "கிங்-மேக்கர்" என்ற பாத்திரத்தை திறம்பட வகிப்பதற்கான வாய்ப்புகள் மிக வலுவாகவே தெரிகின்றன.

பிரதமர் பதவியை நேரடியாகக் கோராமல், கூட்டணி தலைமைத் தேர்வில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாகவும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் என்ன நிலை? அதேபோல் இந்தியா கூட்டணியின் தேசிய முகமாக ராகுல் காந்தி இருக்கும் போது, கூட்டணி கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக ஸ்டாலினை கொண்டு வரலாம். ஆனால் இப்படியான விவாதம் தமிழ்நாட்டின் அரசியலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் திமுகவிடம் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு என்று குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு மற்றும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பேச தொடங்கி இருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால் கூட்டணி இணக்கமாக இருப்பதாக கூறி இருக்கிறார். இப்படியான சூழலில் ராகுல் காந்தி - ஸ்டாலின் தேசிய அரசியலில் இணைந்து பணியாற்ற முடியுமா என்ற கேள்வியை எழுப்பிகிறது. ஸ்டாலினுக்கு உள்ள சிக்கல் இந்த இடத்தில் காமராஜர் கிங்-மேக்கராக இருந்ததற்கு இன்னொரு காரணத்தையும் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் காமராஜர் அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆனால் ஸ்டாலின் பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். ராகுல் காந்தி - ஸ்டாலின் மாடல் வெற்றி பெற வேண்டுமென்றால், திமுகவை நீண்ட கால பார்ட்னராக காங்கிரஸ் கட்சி ஏற்று நடத்த வேண்டும். காங்கிரஸ் ஏற்குமா? அதேபோல் ஸ்டாலின் மாநிலக் கட்சிகளின் நம்பிக்கையை பெற வேண்டும். முக்கியமாக கூட்டுத் தலைமையை ராகுல் காந்தி ஏற்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இங்கு ஸ்டாலினால் காமராஜர் போல் கிங்-மேக்கராக செய,ல்பட முடியுமா என்பது கேள்வியே கிடையாது. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தலைமை பொறுப்பை பிரித்து கொடுக்க தயாரா என்பதுதான்.. இப்படியான ஒரு சமநிலை ஏற்பட்டால், இந்தியா கூட்டணி கட்டுக்கோப்புடன் தேசிய அரசியலில் வலம் வர முடியும்.