கொவிட்-19 தொற்றிலிருந்து ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
04.01.2021 09:08:46
உலக அளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இதுவரை ஆறு கோடியே நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் மொத்தமாக எட்டு கோடியே 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 18இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.