5 விக்கெட்டுக்களை இழந்து ரன் எடுக்க திணறும் இங்கிலாந்து.. இந்திய பவுலர்கள் அபாரம்..!

23.02.2024 08:00:00

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிகெட் டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கிய நிலையில் சற்றுமுன் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க திணறி வருகிறது. 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது/ இங்கிலாந்து அணி 57 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டிருந்த நிலையில் ஆகாஷ் தீப் அபாரமாக பந்துவீசி முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் 

அதன் பின்னர் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் தற்போது இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட் ஆகிவிட்ட நிலையில் ஜோ ரூட் மட்டுமே தன்னந்தனியாக இங்கிலாந்து அணிக்காக போராடி வருகிறார் 

ஆனால் அதே நேரத்தில் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்து வீசி வருவதால் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் இன்னும் சில மணி நேரத்தில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.