மின்சாரம் தாக்கி 17 குழந்தைகள் காயம்

09.03.2024 08:00:00

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் சிவராத்திரி விழா ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 17 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் காயமடைந்துள்ளனர்.

 

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகள் குழு ஒரு உலோகக் கம்பத்தில் இணைக்கப்பட்ட கொடியை ஏந்திக்கொண்டிருந்த போது உயர் அழுத்த மின்சார கம்பியைத் தொட்டதில் மின்சாரம் பாய்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவர்கள் 9 முதல் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன