
ஐரோப்பிய ஒன்றியம் - கனடா புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
ஐரோப்பிய ஒன்றியம்-கனடா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐரோப்பிய ஒன்றியமும் (EU), கனடாவும் தங்கள் மூன்றாவது இருதரப்பு உச்சிமாநாட்டின் போது, பாதுகாப்பு, தொழில்துறை மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு புதிய பக்கத்தை தொடங்கியுள்ளன. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் பிரசெல்ஸில் சந்தித்தனர். |
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, SAFE instrument மூலம் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பாதுகாப்பு வாங்கும் செயல்களில் பங்கேற்க அனுமதிக்கிறது. இத்துடன், கனடாவின் பாதுகாப்பு தொழில்துறையும் எதிர்காலத்தில் இணையும் வகையில் புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவு, ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தங்கள், மொல்டோவாவை பாதுகாப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காசா பகுதியில் தாக்குதலும், இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரிக்கக்கூடாது என்பதையும் இருபுறமும் வலியுறுத்தின. CETA வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றியை இருநாடுகளும் கொண்டாடின. இது மூலப்பொருட்கள் மற்றும் தொழில்துறையில் கூட்டு திட்டங்களை உருவாக்க வழிவகுக்கிறது. மேலும், Digital Trade Agreement மற்றும் AI-யில் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளும் தொடங்க உள்ளன. |