ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீன அதிபர் சுற்றுப்பயணம்

17.07.2022 11:29:22

ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை வந்தார்.

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என கூறி வரும் சீனா, எல்லைகளில் அவ்வப்போது வாலாட்டி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய சீனாவின் ஜின்ஜியாங் பகுதிக்கு வந்த ஜி ஜின்பிங், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை சந்தித்துப் பேசினார்

. ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை வந்தார். ஜின்ஜியாங் ராணுவ பிரிவுதான் லடாக் எல்லை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்பிரிவின் ராணுவ உயர் அதிகாரிகள் வீரர்கள் ஆகியோரை சந்தித்த ஜிங்பிங் அவர்களிடம் எல்லையை சிறப்பாக பாதுகாப்பதாக பாராட்டினார்.