அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவே தாக்குதல்!

21.04.2025 11:36:18

அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரமான செயல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்தது," ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பொலன்னறுவையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தரை வருடங்களாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் உள்ள நோக்கம் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதாகும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

"2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கும் - அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கத்திற்கும் - உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நோக்கம் இல்லை" என்று அவர் கூறினார்.

பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள், தற்போதைய NPP அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கு படிப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இன்று அதிகாலை, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, ஜனாதிபதி திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.