றொரன்டோ சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

12.12.2022 02:17:11

றொரன்டோ மற்றும் றொரன்டோ பெரும்பாக பகுதகளில் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்யுமாறு றொரன்டோ பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் பொதுப்போக்குவரத்து தாமதமாகலாம் என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்து சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் பாதைகளில் பனி மூட்டம் காணப்படும் எனவும் கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை வேளையில் அதிகளவு பனிப்பொழிவு காணப்படும் எனவும் பிற்பகலில் பனிப்பொழிவு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதைகளில் நடக்கும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் மிக அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.