கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமித்த பிறகு கல்லூரிகளை தொடங்க உத்தரவு

15.11.2021 08:52:28

கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமித்த பிறகு கல்லூரிகளை தொடங்க இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என்று அரசு தரப்பு புகார் தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்குவதை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.