இலங்கைக்கு ஜப்பான் அவசர நிதியுதவி!

02.07.2022 16:33:08

இலங்கை மக்களுக்கான மருந்து மற்றும் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கான மருந்து மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக யுனிசெப் மற்றும் உலக உணவு திட்டம் ஆகியவற்றின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் இன்றுவெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அதன் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க உதவியாக இருக்கும் என நம்புவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.