தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

13.07.2021 11:00:20

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் மூன்று இலட்சத்து 71பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 65ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில் இதுவரை இரண்டாயிரத்து 539பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 848பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறாயிரத்து 977பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 9பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 90ஆயிரத்து 555பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.