சஜித் மீதும் தாக்குதல் முயற்சி!

09.05.2022 10:30:37

கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டக் குழுவினர் தற்போது வருகைத்தந்திருந்தனர்.

இதன்போது எரான் விக்ரமரத்ன எம்.பி மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து சஜித்தும், எரானும் ஒரே வாகனத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஏற்றப்பட்டு சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.