நாங்கள் விலகவில்லை ! நாடாளுமன்றில் நாமல் பகிரங்கம்

20.05.2022 15:24:11

 

 கோட்ட கோ கம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து நாங்கள் விலகவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விசாரணைகளுக்கு தாம் பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

கோட்ட கோ கம மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெயரிடப்பட்ட அனைவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.

வன்முறைகளிலும் கொலைகளிலும் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அவ்வாறு செயற்படாவிட்டால் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகம் சீர்குலைந்துவிடும்.

தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் அதேவேளை, தாக்குதல் மற்றும் தீவைப்பு செயல்களை வழிநடத்தியவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்", எனக் குறிப்பிட்டார்.