கொவிட்-19 தொற்றினால் கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,124பேர் பாதிப்பு- 37பேர் உயிரிழப்பு!

09.03.2021 08:18:15

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 90ஆயிரத்து 698பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 276பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30ஆயிரத்து 332பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 549பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 38ஆயிரத்து 090பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.