பேருந்து சாரதியால் அதிபர் ஆக முடியாதா..!
ஒரு பேருந்து சாரதியால் அதிபர் ஆக முடியாதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
அவிசாவளை - சீதாவக்க தேசியப் பாடசாலையில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது சஜித் பிரேமதாச இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
முறைமை மாற்றம்
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியினால் தொடங்கப்பட்டுள்ளது.
அது சுகாதாரம் மற்றும் கல்வித் துறையை இலக்காகக் கொண்டு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மக்களைக் காப்பாற்றுவதும், திருட்டை முறியடிப்பதும் இதில் மிக முக்கியமான பகுதியாகும்.
இந்த திட்டத்திற்காக உழைக்க முடியாத இடதுசாரி சோசலிசக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழுவினர் பெரும் சவால்களையும் அவமானங்களையும் கேலிகளையும் மேற்கொள்கின்றனர்.
பேருந்து சாரதியால் நாட்டின் தலைவராக வர முடியாதா
இந்த நாட்டில் பேருந்து சாரதி ஒருவர் நாட்டின் தலைவராக வர முடியுமா? என அவர்கள் அவமானப்படுத்தினாலும், தற்போதைய இந்தியப் பிரதமர் ரயிலில் சிறுது காலம் டீ விற்றவர் என்பது அவர்களுக்குத் தெரியாது போல” - எனத் தெரிவித்தார்.