
பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்!
இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (08) மும்பை விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில் அவரை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
இது இந்தியாவிற்கு அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் ஆகும்.
இதன்போது , வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்திய பிரதமருடன் பிரித்தானிய பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாளைய தினம்(09) மும்பையில், பிரதமர் மோடியும், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தொழில்துறைத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் இதன்போது இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.