
வேறு ஜனாதிபதிகளுக்கு வாய்ப்பே இல்லை!
02.05.2025 08:52:22
ஓகஸ்ட் அல்லது டிசம்பரில் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தெளிவான செய்தியை அனுப்பி ஆயிரக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் கூடியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். |
தேசிய மக்கள் சக்தியின் (NPP) மே தின பேரணியில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு வாய்ப்பே இருக்காது என்று கூறினார். முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து NPP கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், 2025 மே தினம் அவர்களின் போராட்டத்தின் கொண்டாட்டம் என்றும் பிரதமர் கூறினார். |