தேர்தல் செயலக அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

22.07.2024 08:59:43

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) இராஜகிரியில் உள்ள தேர்தல் செயலக அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

 

‘பிரஜைகள் கூட்டணி’ உறுப்பினர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

இதில் சதிப்புரட்சிக்கு இடமளிக்கப்பட மாட்டாது, ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை உடனடியாக பிரயோகிக்க வேண்டும்’ என்ற பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.