
அமெரிக்காவின் நாடு கடத்தல்;
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சுமார் 300 சட்டவிரோத குடியேறிகள் தற்போது பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு எதிரான பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவர்கள் பனாமாவின் தலைநகரில் அமைந்துள்ள Decápolis என்ற சொகுசு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கும் போது, இந்த நபர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் படங்கள் மற்றும் வீடியோக்களில்,
ஹோட்டலின் ஜன்னல்களில், “தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்” மற்றும் “நாங்கள் பாதுகாப்பாக இல்லை” என்று நாடுகடத்தப்பட்டவர்கள் வாசனங்களை எழுதி வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஹோட்டல் வளாகத்தில் பாதுகாப்பில் இருப்பதனையும் காண முடிகின்றது.