பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை

07.09.2021 05:49:43

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று நடக்கும் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தேரோட்ட நிகழ்ச்சியை பக்தர்கள் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் காண போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடால் மக்கள் இன்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வரவும் போலீஸ் தடை விதித்துள்ளனர்.