மேற்குவங்க தேர்தல் வன்முறை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முறையீடு

20.09.2021 13:50:09

மேற்குவங்க தேர்தலுக்கு பிறகான வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை செப்டம்பர் 28ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் தரப்பு ஆவணங்களை முழுமையாக தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.